ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் - ,மழைவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.
Tags :