தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்

by Admin / 23-04-2023 11:14:59am
தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்

தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று,தமிழ்நாடு தலைவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  சந்தித்து கோரிக்கையை முன் வைக்க உள்ளனா்.இது குறித்து.,

 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசி இருந்த ஒலிநாடாவின் உண்மைத்தன்மையை சுதந்திரமான நியாயமான தடவியல் தணிக்கை  செய்யக்கோரி தமிழக  பாஜக தலைவர் குழு ஒன்று  தமிழக  ஆளுநர் ஆரன் ரவி இன்று சந்திக்க உள்ளதாகவும் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல்  தியாகராஜன் இந்த ஒலிநாடா பொய்யானது யாரு குரலில்  வேண்டுமானாலும்  இப்படி  பேசி வெளியிட  முடியும்  என்று  சமாளித்துக் கொண்டிருப்பதால்  அவர் அந்த ஒலிநாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒளிநாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும் இரண்டு ஒளி மாதிரியும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒளிநாடாக்களின் உண்மை தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும் காலம் காலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு தனது கட்சி தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல் இது அத்தனை எளிதானது அல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் விசித்திர கதைகளை வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியில நம்பலாம் .ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதி அமைச்சரை மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்
 

Tags :

Share via