எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

by Staff / 19-07-2024 02:41:23pm
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரண்டாவது வழக்கிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, பிரகாஷ் அளித்த புகாரில் கொலை மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கரூர் வாங்கல் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via