பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை

by Staff / 20-10-2023 05:27:24pm
பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை

மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு சார்பில் பங்காரு அடிகளார் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடிகளார் உடலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் அடிகளார். இங்குதான் அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via