எலிபேஸ்ட் சாப்டா சிறுவன் பலி
விழுப்புரம் அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்த சிறுவன் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வளவனுார் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மகன் ரூபன், 7; சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்த எலி பேஸ்டை, சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :