திருநீர்மலையில் ரூ.8 கோடி செலவில் ரோப்கார் வசதி.

by Staff / 19-10-2022 04:24:09pm
திருநீர்மலையில் ரூ.8 கோடி செலவில் ரோப்கார் வசதி.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரூ.8 கோடியே 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது என்றார்.
 

 

Tags :

Share via