சிவசங்கர் பாபா 3-வது போக்சோ வழக்கில் மீண்டும் கைது

by Editor / 02-08-2021 01:49:39pm
சிவசங்கர் பாபா 3-வது போக்சோ வழக்கில் மீண்டும் கைது

சென்னையில் புறநகர் பகுதியான கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது ஏராளமான பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. அந்த பள்ளியில் படித்து வந்த பல முன்னாள் முன்னாள் மாணவிகள் அவர்மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியைகளுக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர்.

வசங்கர் பாபா மீது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போக்சோ வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர், தற்போது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

3-வது வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

 

Tags :

Share via