டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

by Editor / 13-01-2024 09:33:38am
டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையொட்டி, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

 

Tags : டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

Share via