பேருந்து விபத்தில் 19 பேர் பரிதாப பலி..

by Staff / 31-01-2024 01:27:01pm
பேருந்து விபத்தில் 19 பேர் பரிதாப பலி..

மெக்சிகோவில் நடந்துள்ள பயங்கர சாலை விபத்து 19 பேரின் உயிரைப் பறித்துள்ளது. குவாடலஜாரா, ஜாலிஸ்கோவில் இருந்து லாஸ் மோச்சிஸ், சினாலோவாவுக்குச் சென்ற பேருந்து, டிரக் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த போது பேருந்தில் 50 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பேருந்து முற்றிலும் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

 

Tags :

Share via