காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்.எல்.ஏக்கள்

by Staff / 04-02-2024 12:45:32pm
காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்.எல்.ஏக்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து விட்டாா்., மம்தா பானர்ஜி -காங்கிரஸ் கட்சிக்கிடையே கருத்து மோதல்தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 15 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்து. அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி அணியில் இணைய உள்ளதாகவும் .குறிப்பாக, பாபா சித்திக் மற்றும் அவரது மகன் ஜீஷான் சித்திக் ஆகியோர்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via