பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு - 26 பேர் பலி
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது குண்டுவெடிப்பு அதே மாகாணத்தின் JUI-F என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில்,12 பேர் உயிரிழந்தனர்.
Tags :