மருத்துவர்கள் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டும் - அரசு உத்தரவு

by Staff / 22-02-2024 02:48:11pm
மருத்துவர்கள் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டும் - அரசு உத்தரவு

நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துச் சீட்டில், மருத்துவர்கள் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய சுற்றறிக்கையில், மத்திய அரசின் அறிவுத்தல் படி, மருத்துவர்கள் இனி நோயாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், மருத்து பரிந்துரை சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்களின் எழுத்துக்கள் புரிய வேண்டும். மத்திய அரசின் இந்த அறிவிப்பை மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via