"மனமார்ந்த நன்றிகள்".. உறுப்பினர் சேர்க்கைக்கு அண்ணாமலை உருக்கம்
அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கி, கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் அண்ணாமலை மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். "மக்கள் அளித்துள்ள இந்த பேராதரவு எனக்கு பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று அவர் கூறியுள்ளார்.
Tags :


















