போக்சோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை.15,000 அபராதம்

by Staff / 15-06-2024 04:19:42pm
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை.15,000 அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திருவாரூரைச் சேர்ந்த முகமது மஜீத்(26) என்பவரை நத்தம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி முகமது மஜீத் என்பவருக்கு 8ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அவருக்கு ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 

 

Tags :

Share via