பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம்

by Editor / 10-07-2022 05:35:44pm
பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தீவிர முன்னேற்பாடுகள் செயல்பட்டு வருகின்றன. திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் கியூ ஆர் கோட் சோதனை செய்யும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன உறுப்பினர்களுக்கு நவீன நுட்பத்தின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில் அதனை ஸ்கேன் செய்ய அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மண்டப வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது மேலும் அங்கு அண்ணார் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களை கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வத்தின் படங்கள் பேனர்களில் இடம்பெறவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம்
 

Tags :

Share via