தமிழ்நாட்டுக்கு மட்டும் 10 பைஸா கூட நிதி கொடுக்கவில்லை ..... நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

by Staff / 22-02-2024 03:01:18pm
தமிழ்நாட்டுக்கு மட்டும் 10 பைஸா கூட நிதி கொடுக்கவில்லை ..... நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ரூ19,650 கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசிடம் கேட்டோம். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ18,214 கோடி நிவாரணம் கேட்டோம். ஆனால், அம்மஞ்சல்லி கூட நிதி கொடுக்கப்படவில்லை. 2021 குஜராத் புயல் பாதிப்புக்கு ரூ1,000 கோடி, 2022 அஸ்ஸாம் வெள்ளம் ரூ250 கோடி, 2021 கர்நாடக வெள்ளத்துக்கு ரூ1,623 கோடி, 2021 மத்தியப் பிரதேச வெள்ளத்துக்கு ரூ650 கோடி, 2021 பீகார் வெள்ளத்துக்கு ரூ1,038 கோடி என நிவாரணம் வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் 10 பைஸா கூட கொடுக்கவில்லை என சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via