எல்லையில் சீன ஆளில்லா விமானம்

by Staff / 25-02-2024 01:16:32pm
எல்லையில் சீன ஆளில்லா விமானம்

இந்திய எல்லையில் சீனாவின் ஆளில்லா விமானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ் மாவட்டம் ரஜதல் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் கண்டனர். அதை கைப்பற்றி ஆய்வு செய்த அதிகாரிகள், அது சீனாவுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தியாவை கண்காணிக்க சீனாவால் அனுப்பப்பட்ட விமானமாக இருக்குமோ என பாதுகாப்பு படையினர் சந்தேகித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via