குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

by Staff / 27-02-2024 01:21:44pm
குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஜெனிஸ்ரீ (5), தார்னிகா (3) ஆகிய குழந்தைகளை ரயில் முன் தள்ளி கொலை செய்துவிட்டு அவரது தாயான வெண்ணிலா (35) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தாய் மற்றும் மகள்களின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via