கடல் அலையில் சிக்கிய மாணவர்கள் பலி..

by Staff / 03-03-2024 02:44:16pm
கடல் அலையில் சிக்கிய  மாணவர்கள்  பலி..

ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 11 பேர் மாணவிகள் 7 பேர் என 18 பேரும் மற்றும் அனந்தபூர் மாவட்டம் பென்னா சிமென்ட் அன்ட் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 22 பேர் 4 ஊழியர்கள் என 26 பேர் மொத்தம் 46 பேர் கல்வி சுற்றுலாவிற்கு நேற்று காலை மாமல்லபுரம் வந்தனர், மாமல்லபுரத்தில் உள்ள புராதான உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி பார்த்த அனைவரும் கடற்கரை கோயில் அருகே நேற்று காலை கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், உடன் வந்த கல்லூரி நண்பர்கள் இணைந்து அவர்களை மீட்க முயன்றனர். 6 பேரை மீட்டனர் அதில் கல்லூரி மாணவர் விஜய் வயது. 18, மூச்சு தினறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் கார்த்திக் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.மேலும் கடலில் மாயமான கல்லூரி மாணவர்கள் பெட்டிராஜி, சேஷாரெட்டி, பார்த்தி, மோனிஷ் ஆகிய 4 பேரை மாமல்லபுரம் போலீசார், கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாமல்லபுரம் மீனவர்கள் மற்றும் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட “ஸ்கூபா டையிங்” வீரர்கள் 20 பேர் கொண்ட குழுவினருடன் மாயமான 4 பேரையும் இரண்டாம் நாளாக தீவிரமாக தேடி வந்த நிலையில் ஷேஷாரெட்டி (20) என்ற மாணவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via