கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

by Staff / 12-03-2024 11:30:00am
கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் வேகமாக கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சி சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில், வேகமாக வந்த கார், எதிரே வந்த சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதுவது பதிவாகியுள்ளது. இதில், இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via