40 தொகுதிகளிலும் தாமரை மலரும்.. ராதிகா சரத்குமார்

by Staff / 15-03-2024 02:45:11pm
40 தொகுதிகளிலும் தாமரை மலரும்.. ராதிகா சரத்குமார்

தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. நாடு நல்லா இருக்க தலைவர் நன்றாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் வர வேண்டும். அண்ணாமலை, பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து என கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். மேலும் வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தது போல் என் மண் என் மக்கள் யாத்திரையில் மூலம் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 

Tags :

Share via