சிஏஏ-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் - 19 ஆம் தேதி விசாரணை

by Staff / 17-03-2024 12:37:48pm
சிஏஏ-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் - 19 ஆம் தேதி விசாரணை

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த தடை கோரி கேரள பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது சரியல்ல. இதை எதிர்த்து எம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒரே நேரத்தில் வரும் 19ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via