ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

by Staff / 18-03-2024 11:23:17am
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தென் சென்னையில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


 

 

Tags :

Share via