திராவிட கட்சிகளை வெல்ல முடியாது: வைகோ

by Staff / 19-03-2024 04:51:24pm
திராவிட கட்சிகளை வெல்ல முடியாது: வைகோ

திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வராஜும், திருப்பூர் தொகுதி வேட்பாளராக சுப்பராயனும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ, முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சுப்பராயன், வை. செல்வராஜ் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சரிடம் வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றபோது முத்தரசன், வைகோ உடன் இருந்தனர்.மோடி எத்தனை முறை வந்தாலும் திராவிட பிடியில் இருந்து தமிழ்நாட்டை அபகரிக்க முடியாது. அளவுக்கு அதிகமான பொய்களை நாட்டின் பிரதமர் அள்ளி வீசுகிறார். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாபெரும் வெற்றி பெறுவார் இவ்வாறு கூறினார்.
 

 

Tags :

Share via