ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 23-03-2024 05:22:16pm
ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி மலைக்கோயிலுக்குச் செல்லும் முக்கிய ரயில் நிலையமான திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பழநி ரயில் நிலையத்தில் காவல்துறையினர், வெடிகுணடு நிபுணர்களின் உதவியோடு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு இன்று 50 காவல்துறையினர், விரைந்து வந்து ரயில் நிலையம் முழுவதும் மோப்பாய் நாய் உதவியோடு சோதனையில் ஈடுபட்டனர்.தொடரந்து பேசிய திண்டுக்கல் கண்காணிப்பாளர் பிரதீப் கூறுகையில், பழனி ரயில் நிலையத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, விரைந்து வந்து ரயில் நிலையத்தை ஆய்வு செய்தோம். இங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via