சவுக்கு சங்கருக்கு அடி மேல் அடி: மேலும் 2 வழக்குகளில் கைது

by Staff / 09-05-2024 03:13:12pm
சவுக்கு சங்கருக்கு அடி மேல் அடி: மேலும் 2 வழக்குகளில் கைது

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவர் அளித்த புகாரில் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை அவரிடம் வழங்கினர். சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via