சவுக்கு சங்கருக்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிவி

by Staff / 09-05-2024 03:07:08pm
சவுக்கு சங்கருக்கு ஆதரவு குரல் கொடுத்த டிடிவி

பெண் காவலர்களை தகாத முறையில் பேசிய வழக்கில், சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு போலீசாரால் தாக்கப்பட்டு சவுக்கு சங்கருக்கு கை முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “சவுக்கு சங்கர் பேசிய வீடீயோவை பார்த்தேன். அவர் பேசியதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், சிறையில் வைத்து தாக்குதல் என வரும் தகவல் கண்டிக்கத்தக்கது” என்றார்.

 

Tags :

Share via