சிவகாசி: ஆளுநர் நடுநிலையுடன் செயல்படுகிறார் எடப்பாடி....

by Staff / 29-03-2024 12:21:11pm
சிவகாசி: ஆளுநர் நடுநிலையுடன் செயல்படுகிறார் எடப்பாடி....

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி பேசினார் , விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் விஜய பிரபாகரன் உள்ளார். நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி வீட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். சிவகாசி என்றாலே பட்டாசு தான். நான் முதல்வராக இருந்த போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பட்டாசு தொழிலாளர்களை அழைத்து வந்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டுமானால் என்னிடம் மனு அளித்தார் அவர்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. எம்பிக்கள் மூலம் மத்திய அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தோம். 2026ல் அதிமுக ஆட்சி அமையும் போது பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். பட்டாசு தொழிலுக்கான தடைகள் இடர்பாடுகளை நீக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். பட்டாசு தொழில் நசிந்துள்ள நிலையில் முதல்வர் நீங்கள் நலமா என்று கேட்கிறார். 

 

Tags :

Share via