விஏஓ படுகொலை - 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மணல் கொள்ளையர்களான ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். இருவருக்கும் தலா ரூ.3,000 அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags :