பாட்டாளி மக்கள் கட்சி ஆற்காடு நகர செயலாளர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்.

by Editor / 08-02-2022 08:13:50am
பாட்டாளி மக்கள் கட்சி ஆற்காடு நகர செயலாளர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்.

நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு பகுதியில் பாமக சார்பாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் அறிவுச்சுடர்  வேட்புமனு திரும்பப் பெற கடைசி தினமான இன்று அறிவுச்சுடர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் இதன்காரணமாக திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இதனை அடுத்து 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாமக நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அறிவுச்சுடர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒப்புதலோடு நீக்கப்படுகிறார் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்

 

Tags : pmk

Share via