குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்

by Editor / 13-09-2021 09:50:23am
குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்

தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டிலில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தஞ்சாவூரில் மணிமண்டபத்தில் ஒப்பந்த அடிப்படையில் குளிர்பான கடைகள் உள்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கலை என்பவர் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஒரு குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் தண்ணீரில் புழுக்கள் நெளிவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்குள்ள கடைகளில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், கடையில் விற்கப்படும் குளிர்பானங்கள், உணவு பண்டங்கள் அதிக விலைக்கு விற்பதாகவும், மேலும் காலாவதியான பொருட்களை விற்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

 

Tags :

Share via