ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கும்பல்.. 5 பேர் கைது

by Staff / 03-09-2024 03:37:50pm
ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கும்பல்.. 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரவு நேரத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துள்ளனது. இது குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசார் விரட்டியதில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில் 5 பேர் பிடிபட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நீளமான அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via