இரண்டு ரயில்கள் மோதி விபத்து.. 31 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பயங்கர விபத்து நடந்தது. ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள கிலா சத்தார் ஷா நிலையம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டன. ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த பயணிகள் ரயில் மோதியது. விபத்தை தவிர்க்க லோகோ பைலட் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இந்த விபத்தில் 31 பயணிகள் படுகாயமடைந்தனர். இருப்பினும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :