பிளஸ் 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை

by Staff / 14-03-2023 11:43:06am
பிளஸ் 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அருகே மிட்டாப்பள்ளியைச் சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் அஸ்வினி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகாததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று முதல் தமிழகம், புதுச்சேரியில் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட 104 என்ற கட்டணமில்லா சேவை எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

 

Tags :

Share via