அதிக மது குடித்த துப்புரவு தொழிலாளி பலி
நெல்லை மாவட்டம் முக்கூடல் சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32). இவர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது குடிக்கும் பழக்கமும் உண்டு நேற்று அதிகாலையில் அண்ணா பஸ் நிலையத்தில் வைத்து மது குடித்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், போதை தலைக்கேறி மயங்கி கிடந்தார். சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :