உத்தமபாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை. போலீசார் விசாரனை

by Editor / 05-08-2021 04:02:13pm
உத்தமபாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை. போலீசார் விசாரனை


தேனி மாவட்டம் உத்தமபாளையம் க.புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள புளியந்தோப்பில் 22 வயது வாலிபா் தூக்கிட்டு இறந்து நிலையில் கிடைப்பதாக உத்தமபாளையம் பேலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த இளைஞா் அப்பகுதியில் தொழு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்கேயே வசித்து வந்தது தெரியவந்தது,இவருக்கு சொந்த ஊா் கூடலூா் என்பதும் இவருக்கு தந்தை மட்டும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதனை தொடர்ந்து உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் மனைவி வீருசின்னம்மாள் (35) இவர் அப்பகுதியில் சத்துணவு உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.குடும்பப் பிரச்சினையின் காரணமாக வீருசின்னம்மாள் உடலில் தீ வைத்து தற்கொலை கொண்டார்.தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண்மணி குறித்தும், தூக்கிட்டு இறந்த இளைஞா் குறித்தும் முழு விபரம் மற்றும் இறப்புக்கான காரணம் குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தமபாளையம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via