திருவெற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகிறது.

by Editor / 04-12-2022 08:04:05am
திருவெற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகிறது.

சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது. அதனை நேற்று இரவு பச்சைக்கொடி அசைத்து மத்திய இணை அமைச்சர் முருகன் வழி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிட பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என முருகன் தெரிவித்தார்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முருகன் தெரிவித்தார். இதில் திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், இதில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைப் போல் செங்கல்பட்டிற்கும் – விழுப்புரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

 

Tags :

Share via