அந்த நாளில் ஆக.6-ல் நடந்த நிகழ்வுகள் 

by Editor / 05-08-2021 05:13:17pm
அந்த நாளில் ஆக.6-ல் நடந்த நிகழ்வுகள் 

 

1284 – பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.


1661 – போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.


1806 – கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.


1812 – இலங்கை விவிலிய சபை கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.


1825 – பொலிவியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.


1832 – இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.


1861 – ஐக்கிய இராச்சியம் லேகோசு நகரை இணைத்துக் கொண்டது.


1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டமைப்பின் அர்கான்சாசு போர்க்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியது.


1870 – பிரான்சுடனான இசுப்பிச்செரென், வோர்த் சமர்களில் புருசியா வெற்றி பெற்றது.


1890 – நியூயார்க்கில் மின்சாரக் கதிரை மூலம் முதன் முதலாக வில்லியம் கெம்மியர் என்ற கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


1901 – ஓக்லகோமாவின் கியோவா நிலம் வெள்ளையினத்தவரின் குடியேற்றத்திற்குத் திறந்து விடப்பட்டது.


1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் 10 கடற்படைப் படகுகள் பிரித்தானிய அரச கடற்படையைத் தாக்கவென வட கடல் நோக்கிப் புறப்பட்டன.


1914 – முதலாம் உலகப் போர்: செர்பியா செருமனி மீதும், ஆஸ்திரியா உருசியா மீதும் போரை அறிவித்தன.


1926 – கெர்ட்ரூட் எடெர்ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.


1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.


1940 – எசுத்தோனியாவை சோவியத் ஒன்றியம் இணைத்துக் கொண்டது.


1944 – வார்சாவாவில் செருமனிக்கு எதிராக ஆகத்து 1 இல் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.


1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் இரோசிமா நகர் மீது அமெரிக்கா "லிட்டில் பாய்" என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.


1952 – இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
1960 – கியூபப் புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.


1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மான் டீட்டோவ் பெற்றார்.


1962 – யமேக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


1964 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியசு என்ற மரம் வெட்டப்பட்டது.


1990 – வளைகுடாப் போர்: குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக் மீது உலகளாவிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியது.


1990 – திராய்க்கேணி படுகொலைகள்: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.


1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.


1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.


1997 – வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர்.


2001 – ஏர்வாடி தீ விபத்து: தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்.


2008 – மூரித்தானியாவில் முகமது அப்தல் அசீசு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியிழந்தார்.


2010 – இந்தியாவில் சம்மு காசுமீர் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 71 நகரங்கள் பாதிப்படைந்தன. 255 பேர் உயிரிழந்தனர்.


2011 – ஆப்கானித்தானில் அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில், 30 அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர்.


2012 – நாசாவின் கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய்க்கோளில் தரையிறங்கியது.

 

Tags :

Share via