தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்.

by Editor / 06-04-2024 08:58:23am
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்.

தஞ்சை பெரிய கோவிலில், சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று மாலை படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து செய்துள்ளன.

 

Tags : தஞ்சை பெரிய கோவில்,

Share via