பற்றி எரியும் காட்டுத் தீ - கொடைக்கானலை சூழ்ந்த புகை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வறட்சியான சூழல் காரணமாக வனப் பகுதிகளில் காட்டுத்தீ அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. பற்றி எரிந்த காட்டுத்தீ காரணமாக இப்பகுதியில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின. இந்த காட்டுத்தீ காரணமாக கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. திடீரென ஏற்பட்ட காட்டு தீயினை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி வருகின்றனர்.
Tags :