5 வயது சிறுமியின் பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்

by Staff / 13-04-2024 03:36:57pm
5 வயது சிறுமியின் பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்

கோவாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து ஊடகத்தில் பேசிய போலீஸ் அதிகாரி சுனிதா சவந்த், “சிகாலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கட்டிடத்தில் உள்ள 20 தொழிலாளர்கள் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்

 

Tags :

Share via