போலீஸ் ஜீப் மோதி திமுக இளைஞரணி செயலாளர் உயிரிழப்பு.

by Editor / 14-04-2024 12:20:30am
 போலீஸ் ஜீப் மோதி திமுக இளைஞரணி செயலாளர் உயிரிழப்பு.

 தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் வயது 42 என்பவர் பரங்குன்றாபுரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் பாரின் உரிமையாளர். இவர் கீழப்பாவூர் திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார். இன்று மாலை  சுரண்டை சேர்ந்தமரம்  சாலையில்  திருப்ப   முயன்ற பொழுது பின்னால் வந்த போலீஸ் ஜீப் சுப்பிரமணியன்  மீது மோதியதில் மருத்துவமனை செல்லும் வழியில்   உயிரிழப்பு. இதனையடுத்து சுரண்டை பஸ் நிலையம் முன்பு அவரது உறவினர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் சுரண்டை சாம்பவர்  வடகரை உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் ஆயத்த பணிகளில் அனைத்து காவல்துறை அங்கு ஈடுபட்டுள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுப்ரமணியன் உடல் வைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் கதவுகளை உடைத்து விட்டு உள்ளே ஏராளமான திரண்டு சென்றதால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர் மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Tags :  போலீஸ் ஜீப் மோதி திமுக இளைஞரணி செயலாளர் உயிரிழப்பு.

Share via