ஜனநாயக கடமையாற்றிய 102 வயது மூதாட்டி
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக முதியவர்கள் மறவாமல் வாக்கு செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 102 வயதான மூதாட்டி ஒருவர் தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார். இளம் வயதினரே வாக்கு செலுத்த யோசித்து வரும் நிலையில் காலையில் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்திய மூதாட்டியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags :