நேருக்கு நேர் மோதிய கார்கள் - 3 பேர் பலி

by Staff / 21-04-2024 02:48:57pm
நேருக்கு நேர் மோதிய கார்கள் - 3 பேர் பலி

விழுப்புரம் வானூர் ப நான்கு வழிச்சாலையில், இன்று காலை திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்தை நோக்கிச் சென்ற காரும், புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.மேலும், மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories