இன்று தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என் ஆனந்த் முன்னிலையில் 25,000 க்கு மேற்பட்டோர் தங்களைஇணைத்துக் கொண்டனர்.
இன்று மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலு ஏற்பாட்டில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. என் நிகழ்வில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து 25,000 க்கு மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்தக் கூட்டம் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை இணைத்து வருவது த வெகவை ஒரு மிகப்பெரிய கட்சியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
Tags :



















