ரவுடி கொலை வழக்கு: 4பேர் சரண்

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகில் ரவுடி வினோத் என்பவர் கடந்த 8-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வினோத் கொலை வழக்கில் 4 பேர் தூத்துக்குடி ஜே. எம். 3 கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.
காஞ்சிபுரம் அன்னை இந்திராநகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் அஜித்குமார் (வயது 23), நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கட்டளைகுடியை சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (23), சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் யுவின்குமார் (25), சென்னை சேதுபுரம் காந்திநகரை சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (20) ஆகிய 4 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :