4 பெண்களுடன் திருமணம்: அதிர்ச்சி சம்பவம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு குமார் என்பவர் 4 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இவருக்கு முதல் மனைவியுடன் 4 குழந்தைகளும், இரண்டாம் மனைவியுடன் 2 குழந்தைகளும் உள்ளனர். இரண்டாவது மனைவியான மஞ்சுவின் சகோதரர் சோட்டுவை வேறு ஒரு பெண்ணுடன் ரயில் நிலையத்தில் வைத்து பார்த்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் மேலும் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின் அவர்களை விட்டு ஓடுவதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags :