பல்கலை.,களில் நிலவும் கடும் நிதி நெருக்கடி - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

by Staff / 03-05-2024 12:34:27pm
பல்கலை.,களில் நிலவும் கடும் நிதி நெருக்கடி - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடி உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் ராஜினாமா செய்துள்ளார். பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழல் உள்ளது.அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via