கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா மகிழ்ச்சி

by Staff / 10-05-2024 04:57:59pm
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா மகிழ்ச்சி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் ஜாமீன் கிடைத்திருப்பது அவருக்கு உதவிகரமாக இருக்கும்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via