கூட்டணி குறித்து பேச அவசியம் ஏற்படவில்லை - ஜி.கே.வாசன்
திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருப்பதால் கூட்டணிக் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. இப்போதே கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை. தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வந்த பின்னர், எங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார்.
Tags :